ரஷ்யாவுடன் மோதல் : நேட்டோவை உதவிக்கு அழைக்கும் உக்ரைன் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

ரஷ்யாவுடன் மோதல் : நேட்டோவை உதவிக்கு அழைக்கும் உக்ரைன்

கிரிமியா கடற்பகுதியில் ரஷ்யாவுடன் கடற்படை மோதல் ஒன்றுக்கு முகம்கொடுத்த நிலையில் அசோவ் கடலுக்கு கப்பல்களை அனுப்பும்படி நேட்டோவிடம் உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரொசன்கோ அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு உதவியாக மற்றும் பாதுகாப்பு வழங்க கப்பல்கள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜெர்மனி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

கருங்கடல் மற்றும் அசோவ் கடலுக்கு இடையிலான கெர்ச் ஜலசந்தியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா அதில் இருந்த உக்ரைனியர்களை கைது செய்து.

உக்ரைனுக்கு நேட்டோ முழு ஆதரவை வழங்கியுள்ளது. உக்ரைன் அந்த அமைப்பில் அங்கத்துவம் அற்ற நாடாகும்.

எனினும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகளை வெல்வதற்காகவே பொரொசன்கோ கடலில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பதற்றத்தை அடுத்து உக்ரைனின் ரஷ்யாவை எல்லையாகக் கொண்ட பிராந்தியங்களில் பொரொசன்கோ 30 நாட்களுக்கு இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜெர்மனி பத்திரிகைக்கு பேட்டியளித்த பொரொசன்கோ, “(அசோன்) கடலை ஆக்கிரமிப்பதைத் தவிர விளாடிமிர் புட்டினுக்கு வேறு தேவை இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஜெர்மனி எமது நெருக்கமான கூட்டணிகளில் ஒன்று மற்றும் உக்ரைனுக்கு உதவ மற்றும் பாதுகாப்பு வழங்க நோட்டோ தனது கப்பல்களை தற்போது அசோவ் கடலில் நிலைநிறுத்த தயாராகும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு கொள்கையை எம்மால் ஏற்க முடியாது. ஆரம்பத்தில் அது கிரிமியாவாக இருந்தது, பின்னர் கிழக்கு உக்ரைன், தற்போது அவர்களுக்கு அசோன் கடல் தேவைப்படுகிறது. ஜெர்மனியும் கூட இதனை தமக்குள் கேட்டுக்கொள்ளட்டும்: நாம் அவரை நிறுத்தாவிட்டால் புட்டின் அடுத்து என்ன செய்வார்?” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிடித்து வைத்திருக்கும் உக்ரைனிய படகுகளை விடுவிக்கும்படி ரஷ்யாக்கு நேட்டோ தலைவர் ஜேன் ஸ்டோல்டன்பேர்க் கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்ததோடு, ரஷ்யா தனது செயலிக் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நேட்டோவின் நட்பு நாடு என்ற வகையில் உக்ரைனுக்கு “அரசியல் மற்றும் நடைமுறை உதவிகளை” தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பொரொசன்கோவின் தற்போதைய அறிவிப்புக்கு நேட்டோ உடன் எந்த பதிலையும் அளித்திருக்கவில்லை.

No comments:

Post a Comment