அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில சிறையில் உள்ள 78 வயது முதியவர், தான் 90 கொலைகளில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில் அவர் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தொடர் கொலையாளியாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தசாப்தங்களாக நகருக்கு நகர் பரவிய கொலைகளில் சாமுவேல் லிட்டில் தொடர்புபட்டிருப்பது குறித்து எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
6 அடி 3 அங்குலம் கொண்ட முன்னாள் குத்துச் சண்டை வீரரான அந்த முதியவர் வீடற்றவர்களில் அடைக்கல முகாம் ஒன்றில் 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்தார்.
இந்நிலையில் லொஸ் ஏஞ்சல்ஸில் 1987 மற்றும் 1989 இல் மூன்று பெண்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் சாமுவேலுக்கு தொடர்பிருப்பது மரபணு சோதனையில் கண்டறியப்பட்டது. 2014 இல் அவர் அந்தக் கொலைகளை ஒப்புக்கொண்டார்.
இதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றொரு கொலை சம்பவம் தொடர்பில் டெக்ஸாஸுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் 1970 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கு இடையில் செய்த கொலைகள் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த 90 கொலைகளில் 34 கொலைகளை சட்ட அமுலாக்கல் பிரிவு இதுவரை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய தொடர் கொலையாளியாக கெர்ரி ரிட்ஜ்வே என்பவர் கருதப்படுகிறார். 49 கொலைகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட அவர் தற்போது சிறை அனுபவித்து வருகிறார்.
No comments:
Post a Comment