பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்​கை ஜனவரி 23ம் திகதி வரை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி முன்னிலையில் இன்று (31) அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு சாட்சியாளர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment