போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் உழைக்கப்பட்ட பணம் மூலம் 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 13ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி முன்னிலையில் இன்று (31) அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு சாட்சியாளர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் உழைக்கப்பட்ட பணம் மூலம் கோட்டே, தெஹிவளை மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்களில் 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதன் ஊடாக பண மோசடி சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் என்று தெரிவித்து வெலே சுதா, அவரது மனைவி மற்றும் அவரிக சகோதரி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment