பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில்துறை இராஜாங்க வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
22 பெருந்தோட்டக் கம்பனிகள், தோட்ட முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் ஆணையாளர் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment