ஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர் வீராங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களை தயாரிப்பது அவசியம் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று (01) ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.
விளையாட்டு, கல்வி, உயர்கல்வி, இளைஞர் விவகார அமைச்சுக்கள் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். என்று தெரிவித்த பிரதமர் விளையாட்டுத்துறையின் மேம்பாடு கருதி நாடெங்கிலும் சகல வசதிகளுடனும் கூடிய 500 விளையாட்டு நிலையங்களை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
நாட்டின் விளையாட்டுத்துறை மேம்படுத்தும் நோக்கில் நாடு பூராகவும் சகல வசதிகளையும் கொண்ட 500 விளையாட்டு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.
பிரதான பாடசாலைகளை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த மத்திய நிலையங்களை ஏனைய பாடசாலைகளுக்கும் பயன்படுத்த முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை விளையாட்டு விழாவை நாட்டுக்கு அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பிரதமர் கல்வியமைச்சராக இருந்த போது கல்வித்துறைக்கென பல்வேறு எண்ணக்கருக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment