ACMC கல்குடா இளைஞரணியின் விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

ACMC கல்குடா இளைஞரணியின் விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அணியினர் நடாத்திய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (30.09.2018) இரவு ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அமைப்பால் பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யவும் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடாத்தி வருகின்றது.

அதன் அடிப்படையிலயே கழகங்களுக்கிடையில் உதைப்பந்தாட்டப்போட்டியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக்குழுக்களுக்கிடையில் கயிறி ழுத்தல் போட்டியையும் நடாத்தியது.
உதைப்பந்தாட்டப் போட்டியில் எட்டுக்கழகங்கள் பங்கு பற்றியதுடன், சுழற்சி சுற்றில் பன்னிரெண்டு போட்டிகள் இடம்பெற்றதுடன், அறை இறுதிப்போட்டிக்கு வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக்கழகமும் ஓட்டமாவடி யங் லைன்ஸ் விளையாட்டுக்கழகமும் கலந்து கொண்டதில், ஓட்டாவடி யங் லைன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

அதே போல் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகமும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழகமும் போட்டியிட்டு அதில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டிக்குத் தெரிவான ஓட்டமாவடி யங் லைன்ஸ் விளையாட்டுக்கழகமும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகமும் கலந்து கொண்டதில் போட்டி நேரத்தில் எந்தக்கழகங்களும் கோல்களைப் போடாததால் போட்டியில் முடிவு காண்பதற்காக “பினால்டி” முறை வழங்கப்பட்டு, அதில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழகம் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
இதே போன்று கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இருபத்தொரு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரக்குழுக்கிடையில் கயிறிழுத்தல் போட்டி நடாத்தப்பட்டது. இதில் இறுதிப்போட்டிக்கு மீறாவோடை வட்டார அணியும் பிறைந்துரைச்சேனை வட்டார அணியும் தெரிவாகி, அதில் பிறைந்துரைச்சேனை வட்டாரக்குழு வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

உதைப்பந்தாட்டப்போட்டி தொடரின் சிறந்த பந்துக்காப்பாளராக வளர்பிறை விளையாட்டுக்கழக உறுப்பினர் உவைஸ் சப்ரானும், சிறந்த விளையாட்டு வீரராக யங் லைன்ஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர் எல்.ரீ.எம்.சித்தீக்கும், சிறந்த தொடர் ஆட்ட நாயகனாக நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர் எஸ்.எம்.இம்ரானும் தெரிவு செய்யப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதே வேளை, விளையாட்டுத்துறையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதியும் கௌரவிக்கபட்டனர்.
டாக்டர் ஏ.ஏ.அப்தாப் அலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியூதீன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏனைய அதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயம் எஸ்.சுபைதீன், கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஹம்மது முஷர்ரப், கட்சியின் பிரதேச சபைத்தவிசாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment