வவுனியா – ஓமந்தை பகுதியில் மீட்கப்பட்ட மிதிவெடிகளை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.
ஓமந்தை – மயிலங்குளம் மற்றும் கொந்தகாரகுளம் ஆகிய பகுதிகளில் மிதிவெடிகளும் மோட்டார் குண்டுகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
நான்கு மோட்டார் குண்டுகளும் இரண்டு மிதிவெடிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இவற்றை செயலிழக்கச் செய்வதற்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்து, உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (04) இவற்றை செயலிழக்கச் செய்யவுள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment