கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நேற்று (29) இரவு 7 மணி அளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை கண்ட இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் பின் தொடர்வதனை அவதானித்த வாகனத்தில் பயணித்தோர், குறுக்கு வீதிகள் ஊடாக வேகமா பயணித்துள்ளனர்.
பின்னர் வழி தவறி குளப் பாதை ஒன்றினுள் நுழைய, குறித்த வாகனம் வாகனத்தில் இருந்து 4 பொதிகளை எறிந்து விட்டு குள எல்லைக்குள் சென்று அங்கு பாதை முடிவடைந்ததினால் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் வீசிய பொதிகளைப் பார்வையிட்ட பொழுது சுமார் 1 கிலோ அளவிலான 4 கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரால், சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவு விசேட குழுவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர், குறித்த கஞ்சா பொதிகளையும் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிபோஜன்
No comments:
Post a Comment