அமரபுர மகா நிக்காயவின் சிறி சுமன பிரிவின் மகா நாயக்கராக கொலன்னாவே சிறி சுமங்கல தேரர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 17, 2018

அமரபுர மகா நிக்காயவின் சிறி சுமன பிரிவின் மகா நாயக்கராக கொலன்னாவே சிறி சுமங்கல தேரர் நியமனம்

கலாநிதி வண. கொலன்னாவே சிறி சுமங்கல தேரருக்கு இலங்கை அமரபுர மகா நிக்காயவின் சிறி சுமன பிரிவின் 09ஆவது மகா நாயக்கர் பதவியின் நியமனப் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (16) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

1811ஆம் ஆண்டில் ஆரம்பமான இலங்கை அமரபுர மகா நிக்காயவின் சிறி சுமன பிரிவின் 08ஆவது மகா நாயக்கரான மாத்தறை விமலரத்தனாதிபதி தேரரின் மறைவினால் அந்த உயரிய பதவிக்கு பன்னிப்பிட்டிய ஸ்ரீ தெவ்றும் விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. கொலன்னாவே சிறி சுமங்கல நாயக்க தேரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய மகா நாயக்கரின் நியமனத்திற்குரிய பத்திரங்களை ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கி வைத்தனர்.
இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்கர் அக்கமகா பண்டித வண. கொடுகொட தம்மாவாச தேரர், இலங்கை ராமஞ்ஞ மகா நிக்காயவின் மகா நாயக்கர் அதிவண. நாபானே பேமசிறி தேரர், மல்வத்து மகா விகாரை பிரிவின் அநுநாயக்க தேரர் கலாநிதி வண. நியங்கொட விஜிதசிறி தேரர், அஸ்கிரி மகா நிக்காயவின் அநுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்சி தேரர் உள்ளிட்ட மூன்று நிக்காயாக்களின் மகா சங்கத்தினரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, துமிந்த திசாநாயக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment