20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டினை சபாநாயகருக்கு அறிவிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 16 மனுக்களை 3 நாட்களாக விசாரணை செய்ததன் பின்னர் உயர் நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்பித்த 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கட்ட 16 மனுக்களை உயர் நீதிமன்றம் 3 நாட்களாக விசாரணை செய்திருந்தது. இந்த விசாரணையின் முடிவை இரகசியமான முறையில் சபாநாயகருக்கு அறிவிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment