இலங்கையில் மத்திய தர வகுப்பினர் பாவிக்கின்ற 1000 சி.சி.கொள்ளளவுக்கு உட்பட்ட வாகனங்களின் வரிகளை அதிகரிப்பு செய்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தினை அதிகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தொிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் சீர்குலைந்து காணப்படுகின்றமையால் அதில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக, அரச சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாட்டின் பிரதான துறைமுகம் மற்றும் விமான நிலையங்களின் ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பது கவலைக்குரிய விடயமாகும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து காணப்படுகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றமை மிகவும் ஆச்சரியமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனுடன் தொடர்பான முன்னரான செய்திக்கு
https://www.newsview.lk/2018/08/215.html
No comments:
Post a Comment