சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
அவர் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது : கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் நாளை (16) முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கையை இன்று வந்தடைந்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள அவர், பொருளாதார சவால்கள் பிராந்தியத்திற்கான வாய்ப்புகள் குறித்தும் சர்வதேச நாணய நிதியம் இவற்றிற்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது குறித்தும் அறிந்துகொள்வதற்காக அதிகாரிகள் சிவில் சமூகத்தினர் வர்த்தக சமூகத்தினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை என்பதால் அவரது இரண்டு நாள் விஜயம் குறிப்பிடத்தக்கதாக காணப்படுகின்றது.
மேலும் இலங்கை அதிகாரிகளுடனும், இலங்கை சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிற்கு இடையிலான ஈடுபாட்டுடன் தொடர்புபட்டவர்களுடனும் கீதா கோபிநாத் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment