பாடசாலை உடைக்கப்பட்டு மாணவர்கள் சேமித்த பண உண்டியல் திருட்டு, பாடசாலைக்கும் சேதம், அதிபர் அறையின் கதவுக்கு தீ வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 30, 2018

பாடசாலை உடைக்கப்பட்டு மாணவர்கள் சேமித்த பண உண்டியல் திருட்டு, பாடசாலைக்கும் சேதம், அதிபர் அறையின் கதவுக்கு தீ வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலை உடைக்கப்பட்டு மாணவர்கள் சேமித்த பண உண்டியல் திருடப்பட்டுள்ளதுடன் பாடசாலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இன்று (30.08.2018) வியாழக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இன்று காலை பாடசாலைக்கு அதிபர் வருகை தந்து பாடசாலையை பார்த்த போது பாடசாலை அதிபரின் கட்டிடம் உடைக்கப்பட்டிருந்ததுடன் அதிபரின் அறைக் கதவு உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாடசாலையின் மேல் மாடியிலுள்ள அலுமாரி உடைக்கப்பட்டு அங்கு இருந்த மாணவர்கள் சேமித்த பண உண்டியல் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிபர் எம்.பாறூக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து இங்கு வருகை தந்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டதுடன் காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் குறித்த பாடசாலைக்கு சென்று பார்வையிட்டார்.

பாடசாலையின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் குறிப்பிட்டார். இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment