அரச பணியாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படக்கூடாது அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

அரச பணியாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படக்கூடாது அமைச்சர் மஹிந்த அமரவீர

பாராளுமன்ற உறுப்பினர்களுடையது மட்டுமன்றி அரச பணியாளர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படக்கூடாது என்று விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பொருளாதாரம் பலமடைந்தால் மாத்திரமே நாடு என்ற வகையில் முன்னேற முடியும் என்றும் உற்பத்திகளை அதிகரித்து உற்பத்திக்காக பங்களிப்பு செய்வோருக்கு ஊக்க கொடுப்பனவுகள் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களினதும், அரச பணியாளர்களினதும் சம்பளத்தை அதிகரிப்பதால் மாத்திரம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment