உடனடி அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

உடனடி அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான கடிதம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரியினால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முறையான நிலைக்கு கொண்டு வருவதற்கும் அதிகாரிகளின் செயல்திறன் நிலமையை கருத்திற் கொண்டும் சிறைச்சாலை திணைக்களத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கிலும் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment