உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இரண்டாவது சுற்று போட்டி நாளை (30) நடைபெறவுள்ளது. இப் போட்டியில் பிரான்ஸ் - ஆர்ஜன்ரீனா, உருகுவே - போர்த்துக்கல் அணிகள் மோதுகின்றன.
21ஆவது உலகக்கிண்ண கால் பந்து போட்டிகள் கடந்த 14ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
இக் கால் பந்தாட்ட சுற்றுத்தொடரின் நான்கு போட்டிகள் நேற்று (28) இடம்பெற்றன. இவை முதற்சுற்றுக்குரிய இறுதிப் போட்டிகளாகும்.
செனகலுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் போலந்து வெற்றி பெற்றது.
பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியதில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றிபெற்றுள்ளது.இந்த மூன்று போட்டிகளும் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் முடிவடைந்தன. பனாமா – துனிசியா அணிகளிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் பனாமா வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம், ஜீ குழுவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளும், எச் குழுவில் இருந்து கொலம்பிய, ஜப்பானிய அணிகளும் நொக்-அவுட் சுற்றுக்குத் தெரிவாகின. இரண்டாவது சுற்று போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றது. இதில் 16 நாடுகள் போட்டியிடவுள்ளன. 16 நாடுகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment