இம்முறை சிறுபோகத்திற்கான பயிர்ச் செய்கைகளை பாதுகாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு காப்புறுதி உறுதிப் பத்திரங்களை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான காப்புறுதியை எந்தவிதக் கொடுப்பனவும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சோயா அவரை மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இலவசமாக காப்புறுதி வழங்கப்படும்.
ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதமும், ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பிற்கு ஒரு லட்சம் ரூபா வீதமும் காப்புறுதி வழங்கப்படும்.
இலங்கை விவசாய மற்றும் கமநல சபையின் ஊடாக இந்தக் காப்புறுதிகள் வழங்கப்படும். எனவே, இந்தப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்கான கொடுப்பனவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதுவிடயம் தொடர்பான அறிவுரைகளை அமைச்சர் விவசாய மற்றும் கமநல சபைக்கு வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment