உறுதியான நிதி நிலைமையை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்த்த இலக்குகளை அடைந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளுர் சந்தையில் உள்ள குறைபாடுகளை நீக்கி கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வணிக நடவடிக்கைகளை இலகுபடுத்த அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.
இந்த நாட்டுக்கு மீளக் கிடைக்கப் பெற்ற ஜி.எஸ்.பி வரிச்சலுகை, சிங்கப்பூருடனான திறந்த வர்த்தக உடன்படிக்கை மற்றும் இதுவிடயம் தொடர்பாக சீனா மற்றும் இந்தியாவுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளும், சாதகமான நிலைமைகளை தோற்றுவித்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அமரர் கலாநிதி சமன் கெலேகமவை நினைவுகூரும் விசேட நிகழ்வு கொழும்பில் இன்று (29) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
யுத்தம் முடிவுற்ற பின்னர் இலங்கை எதிர்கொண்ட சவால்களும் அவற்றிற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு சமகால நல்லிணக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான சவால்களை வெற்றிகொள்ள முடிந்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இவையெல்லாம் நாட்டில் நல்லிணக்கம், சமாதானம் மற்றும் மனித உரிமைகளை பேணிய வண்ணமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டு மக்கள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான பல நன்மைகளை தற்சமயம் பெற்று வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment