தெற்கு அதிக வேக வீதியின் கொக்மாதுவ இடைபரிமாற்றம் மற்றும் கொடகம இடைபரிமாற்றம் ஆகியவற்றிற்கிடையிலுள்ள ஒரு ஒழுங்கை இன்று (01) முதல் மூடுப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் குறித்த பகுதியில் இடம்பெற்று வரும் நிர்மாணப் பணிகள் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் பிரதான நீட்சி மற்றும் தற்போது காணப்படும் மாத்தறை வரையான அதிவேக வீதி ஆகியவற்றை இணைப்பது தொடர்பான பணிகளே தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment