டிப்பர் வாகனத்துடன் மோதி பொலிஸ் காண்ஸ்டபிள் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

டிப்பர் வாகனத்துடன் மோதி பொலிஸ் காண்ஸ்டபிள் பலி

காலி - கொழும்பு பிரதான வீதியின் பேருவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (03) காலை களுத்துறையில் இருந்து அளுத்கம திசையை நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பென்தர, ஹபுரகல பகுதியை சேர்ந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 29 வயதுடைய பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment