புதிய பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் - பெரிய பள்ளிவாசலின் ஆதிக்கத்தை குறைக்குமாறும் கோரிக்கை - நூற்றுக்கணக்கானோர் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

புதிய பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் - பெரிய பள்ளிவாசலின் ஆதிக்கத்தை குறைக்குமாறும் கோரிக்கை - நூற்றுக்கணக்கானோர் கடிதம்

ஷவ்வால் மாத தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் விட­யத்தில் இம்முறை ஏற்­பட்ட குள­று­ப­டி­களைத் தொடர்ந்து பிறைக் குழுவை மறு­சீ­ர­மைக்­கு­மாறு பல்­வேறு தரப்­பு­களும் கோரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் கீழி­யங்கும் தற்­போ­துள்ள பிறைக்­கு­ழுவை கலைத்­து­விட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­க­ளத்தின் கீழி­யங்­கும்­வ­கை­யி­லான அரச அங்­கீ­காரம் பெற்ற புதிய தேசிய பிறைக்­கு­ழு­வொன்றை தாபிக்­கு­மாறும் குறித்த கோரிக்­கையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

நாட்டில் பிறையை தீர்­மா­னிக்கும் விட­யத்தில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் கொண்­டுள்ள ஆதிக்­கத்தை குறைக்க வேண்டும் என்றும் இந்த கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேற்­படி விட­யங்­களை உள்­ள­டக்கி முஸ்லிம் சமய விவ­கார அமைச்ச­ருக்கு கடந்த மூன்று தினங்­களில் நூற்­றுக்கும் மேற்­பட்ட மின்­னஞ்­சல்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த மின்னஞ்சல்களை முஸ்லிம் கல்­வி­மான்கள், உய­ர­தி­கா­ரிகள், உலமாக்கள், தனியார் நிறு­வ­னங்­களின் தலை­வர்கள், அர­சியல் பிரமு­கர்கள் என பலரும் அனுப்பி வைத்­துள்­ளனர்.

குறித்த மின்­னஞ்சல் கடி­தங்­களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா­வது,

இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் நீண்ட வர­லாற்றைக் கொண்­டி­ருக்­கின்றோம். இக்­கா­லப்­ப­கு­தியில் மிகவும் அமை­தியும் சமா­தா­னமும் நில­விய சூழ்­நி­லை­யி­லேயே நாம் எமது மார்க்கத்தைப் பின்­பற்றி கௌர­வ­மாக வாழ்ந்து வந்திருக்கின்றோம். 

ஆனால் அண்­மைக்­கா­ல­மாக எமது வாழ்வு பல்வேறு சவால்­களை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கி­றது. அவற்றை எதிர்­கொள்ள முன்னெப்­பொ­ழு­தையும் விட ஒற்­று­மை­யாக ஓரணியில் திரள வேண்­டி­ய­வர்­க­ளாக நாம் இருக்­கின்றோம்.

ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக எம்­மி­டை­யே­யான பிள­வுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்­த­வண்­ண­முள்­ளன. அது எமது இருப்­பையே ஆட்டம் காணச் செய்து விட முடியும்.

அவ்­வ­கையில் இம்­முறை ஷவ்வால் மாதத் தலைப்­பிறை தொடர்பாக எழுந்­துள்ள சர்ச்சை இலங்கை முஸ்­லிம்­களை மென்மேலும் பிள­வு­ப­டுத்தி விடக்­கூடும். எனவே தலைப்­பி­றையைத் தீர்­மா­னிப்­பதில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் பிர­யோ­கிக்கும் கட்டு­மீ­றி­யதும் ஜன­நா­யக விரோ­த­மா­ன­து­மான அதி­காரம் குறைக்கப்­பட்டு பின்­வரும் பொறி­மு­றையின் மூலம் தீர்மானிக்கப்ப­டு­வது பொருத்­த­மாக அமையும் என்ற ஆலோசனையை தங்­க­ளது மேலான கவ­னத்­துக்குக் கொண்டு வர விரும்­பு­கிறோம்.

01. தேசிய பிறைக்­குழு

1. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா – 03 அங்­கத்­த­வர்கள்

2. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் – 01 அங்­கத்­தவர்

3. தேசிய ஷூரா சபை - 01 அங்­கத்­தவர்

4. இலங்கை முஸ்லிம் கவுன்சில் - 01 அங்­கத்­தவர்

5. வான­சாஸ்­திர விஞ்­ஞா­னிகள் – 04 அங்­கத்­த­வர்கள்

6. முஸ்லிம் சமய, கலா­சார விவ­காரப் பணிப்­பாளர் - 01 அங்­கத்­தவர்

மொத்தம் 11 அங்­கத்­த­வர்கள்

02. பெரும்­பான்மை முடிவின் பிர­காரம் தீர்­மா­ன­மெ­டுத்தல் வேண்டும்.

03. தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு முஸ்லிம் சமய கலாசார அலு­வல்கள் திணைக்­க­ளத்தில் நடாத்­தப்­படல் வேண்டும்.

04. முஸ்லிம் சமய, கலா­சார விவ­காரப் பணிப்­பாளர் அக்­கு­ழுவின் செய­லா­ள­ராக செயற்­பட்டு கூட்ட அறிக்­கை­களை அவரே எழு­துதல் வேண்டும்.

05. இறு­தி­யாக ஊடக அறிக்கை ஒன்றை முஸ்லிம் சமய, கலா­சார விவ­காரப் பணிப்­பாளர் வெளி­யிட வேண்டும்.

06. இதற்கு மேல­தி­க­மாக முஸ்லிம் சமய, கலா­சார விவ­காரப் பணிப்பா­ள­ருக்கு ஆலோ­சனை வழங்­க­வென பிரத்­தி­யே­க­மான ஆலோ­ச­னைக்­கு­ழு­வொன்று திணைக்­க­ளத்தில் நிய­மிக்­கப்­ப­டவும் வேண்டும்.

07. அவ்­வாறே தலைப் பிறையைத் தீர்­மா­னிப்­பதில் சார்க் நாடுகளுடனும் சர்­வ­தே­சத்­து­டனும் கலந்­து­ரை­யாடி பிராந்­திய ரீதியி­லான முடி­வு­களை எட்­டவும் ஆவன செய்­யப்­படல் வேண்டும்.

மேற்­படி ஆலோ­ச­னை­களைக் கருத்­திற்­கொண்டு பொருத்­த­மான தீர்வைப் பெற்றுத் தந்து முஸ்லிம் சமூ­கத்தின் கௌர­வத்­தையும் எதிர்­காலப் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்த ஆவன செய்­யு­மாறு தங்­களை வின­ய­மாக வேண்­டிக்­கொள்­கிறோம்.

மேற்­படி மின்­னஞ்­சல்கள் செய­லாளர் - முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சு , தலைவர் - கொழும்பு பெரிய பள்ளிவாசல், செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய, கலாசார விவகாரப் பணிப்பாளர் ஆகியோருக்கும் இக் கடிதங்கள் பிரதியிடப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த கோரிக்கைகள் தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Vidivelli

No comments:

Post a Comment