ஹஜ் முகவர் அனுமதிப்பத்திரங்கள் நாளை அமைச்சினால் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

ஹஜ் முகவர் அனுமதிப்பத்திரங்கள் நாளை அமைச்சினால் கையளிப்பு

இவ்வருட ஹஜ் கடமையினை மேற்கொள்ளவுள்ள ஹஜ் முகவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் பூர்த்­தி­ய­டைந்­துள்ள நிலையில் ஹஜ் முக­வவர்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்­வ­ரும் 25 ஆம் திகதி அஞ்­சல், அஞ்சல் சேவை­க­ள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்­ள­து.

அஞ்சல் திணை­க்­க­ளத்தின் தலை­மைக் காரி­யாலய கேட்போர் கூடத்தில் இந்­நி­கழ்­வு ஏற்­பாடு செய்­ய­ப்­பட்­டுள்­ள­தா­கவும் இவ்வருடம் நிய­மனம் பெற்­­றுள்ள 95 ஹஜ் முக­வர்­களில் 83 பேர் அனும­திப்­பத்­தி­ரங்கள் பெற்­றுக்­கொள்ளவுள்­ள­தா­கவும் அரச ஹஜ்­ குழு­வின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

சில ஹஜ் முக­வர்கள் 10 க்கும் குறை­வான கட­வுச்­சீட்­டுக்­க­ளை­யே­ பெற்­றுக்கொண்­டுள்­ளதால் அவர்­ககள் ஏனைய ஹஜ் முகவர்களுடன் இணை­ந்­து கொள்­வ­தற்­கான கால அவ­கா­சம் நாளை செவ்­வாய்க்­கி­ழமை வரை வழங்­கப்­பட்­டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதே­வேளை கோட்டா பகி­­ர்வு முறையில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் மேற்­கொள்ள வேண்டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆராய்­வ­தற்கு அகில இலங்கை ஹஜ் முக­வர்கள் சங்கம் இன்று கொழும்பு முஸ்லிம் மக­ளிர் வலய மண்டபத்தில் கூட்­­ட­மொன்­றி­னையும் ஏற்­பாடு செய்­­துள்­ளது.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3000 கோட்டா கிடைத்துள்­ளமை குறிப்பிடத்­தக்­­க­­து. இதில் 2800 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பயணிக்கவுள்ளனர். ஏனைய 200 கோட்டாவும் ஹஜ் வழி­காட்­டிகள், சமை­யற்கா­ர­ர்கள் என்­போ­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­ன.

Vidivelli

No comments:

Post a Comment