சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபர் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (05) அதிகாலை குவைட்டில் இருந்து வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரிடம் 14 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 29,960 சிகரட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு, கொலன்னாவ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment