பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ´சொல்டா´ எனும் அசித்த பிரேமதிலக கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொரள்ள பகுதியில் வைத்தே, அசித்த பிரேமதிலக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதுருகிரிய பிரதேசத்தில் அழகுகலை நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மஞ்சுளா சதுனி அபேரத்ன மற்றும் மாலபே நடை பாதை ஒழுங்கையில் வைத்து கொலை செய்யப்பட்ட ´பொலி ரொஷான்´ என்பவர்களின் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அசித்த பிரேமதிலக இனம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment