கடத்தல் சம்பவம் தொடர்பில் நகரசபை தலைவர் உட்பட நால்வர் கைது - News View

About Us

Add+Banner

Sunday, June 3, 2018

demo-image

கடத்தல் சம்பவம் தொடர்பில் நகரசபை தலைவர் உட்பட நால்வர் கைது

1528077903-hand-cauf-L
தலவாக்கலை லிந்துளை நகர சபையின் தலைவர் அசோக்கசோபல கைது செய்யபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நுவரெலியா பொலிஸாரால் நேற்று (03) இரவு 09 மணி அளவில் தலவாக்கலை லிந்துளை நகர சபையின் தலைவரை அழைத்துச் சென்று விசாரனைகளை மேற்கொண்ட போதே அவர் கைது செய்யட்டதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

கடந்த 2017ம் ஆண்டு அக்கரபத்தனை பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தபட்ட சம்பவம் தொடர்பிலும் 5 வயது குழந்தை ஒன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்ட சம்பவம் தொடர்பிலும் தலவாக்கலை லிந்துளை நகர சபையின் தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட தலவாக்கலை லிந்துளை நகர சபையின் தலைவர் அசோக்கசோபல உட்பட மேலும் நான்கு பேர் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *