80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, June 11, 2018

80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது

80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இன்று (11) அதிகாலை டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்த போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

வரகாபொல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் அவருடைய காற்சட்டையில் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரான குறித்த பெண்ணிடம் இருந்து 1245 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment