ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 1--0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணி எச் பிரிவில் முதலிடம் பிடித்தது.
2 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ஒரு லீக் போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.
இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிரிவில் முதலிடம் பிடிக்கும்.
இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்காததால், ஆட்டம் சமனில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அட்னான் ஜனுசாஜ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1--0 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பெல்ஜியம் அணி 1--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. லீக் போட்டியில் பனாமா அணியை 2--1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வீழ்த்தியது.
பனாமா, துனிசியா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.
இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் துனிசியா அணியின் யாசின் மெரையா, தவறுதலாக எதிர் அணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். இதனால் பனாமா அணி 1--0 என முன்னிலை பெற்றது. அதன்பின் துனிசியா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் பனாமா அணிக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் துனிசியா வீரர் பென் யூசப் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1--1 என சமனானது.
அதன்பின் 66-வது நிமிடத்தில் துனிசியா வீரர் வஹ்பி காஸ்ரி கோல் அடித்தார். இதனால் துனிசியா அணி 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இறுதிவரை இரு அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் துனிசியா அணி 2--1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய துனிசியா அணி துனிசியா அணி, எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.
நொக்அவுட்டுக்கு முன்னேறிய ஜப்பான்
எச்’ பிரிவில் எந்த அணி நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது என்பதை உறுதி செய்யும் கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் போலந்து 1--0 என வெற்றி பெற்றது. அதேவேளையில் இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா - செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்றது.
இதனால் ஜப்பான், செனகல் அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் தலா நான்கு புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் அடித்தது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரண்டு அணிகளுமே நான்கு கோல் அடித்து சமநிலையில் இருந்தது.இதனால் எந்த அணி அதிக கோல் வாங்கியது என பார்த்தபோது, இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் வாங்கியிருந்தன.
இதனால் கோல் அடிப்படையிலும் இரு அணிகள் சமநிலை பெற்றிருந்தன. இதனால் ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது. இதில் செனகலுக்கு சறுக்கல் ஏற்பட்டது. செனகல் 6 மஞ்சள் அட்டை பெற்றிருந்தது. ஆனால் ஜப்பான் 4 மஞ்சள் அட்டைதான் பெற்றிருந்தது.
இதனால் அதிர்ஷ்டம் மூலம் ஜப்பான் நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
எச் பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா கடைசி லீக்கில் செனகலை 1--0 என வீழ்த்தி நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
எச் பிரிவில் எந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது என்பதை உறுதி செய்யும் கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் கொலம்பியா - செனகல் அணி மோதின.
இதில் வெற்றி பெற்றால்தான் நொக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் கொலம்பியாவும்,
டிரா செய்தாலே நொக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் செனகல் அணியும் களம் இறங்கியன.
முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் கொலம்பியாவின் மினா கோல் அடித்தார்.
இதனால் கொலம்பியா 1--0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதனால் கொலம்பியா 1--0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா மூன்று ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்று நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
No comments:
Post a Comment