எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் மத்தியில் தேவையில்லா பிரச்சனை ஒன்றை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இதேவேளை, நாட்டினுள் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் பரப்பப்பட்டுள்ளதென்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
அவ்வாறு தட்டுப்பாடு இல்லை என்றும் மக்கள் வீணாக குழப்பமடைய தேவையில்லை என்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர கூறியுள்ளார்.
பெற்றோல் விநியோகம் செய்கின்ற தனியார் பவுசர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெற்றோல் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்று பொய்ப் பிரச்சாரம் பரவிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பௌஸர்கள் மூலம் அவசியமான எரிபொருள் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர கூறியுள்ளார்.
No comments:
Post a Comment