கடவுள் தங்களை தொடரில் இருந்து வெளியேற விடமாட்டார் - மெஸ்ஸி - News View

About Us

About Us

Breaking

Friday, June 29, 2018

கடவுள் தங்களை தொடரில் இருந்து வெளியேற விடமாட்டார் - மெஸ்ஸி

இறைவன் தங்களுடன் இருப்பதாகவும், தங்கள் அணியை தொடரில் இருந்து வெளியேற விட மாட்டார் என்றும் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

டி பிரிவில் உள்ள இந்த அணி, நைஜீரியாவுடனான வாழ்வா சாவா ஆட்டத்தில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுகுறித்து பேசியுள்ள லயனல் மெஸ்ஸி, இதுபோன்ற ஒரு பதற்றமான ஆட்டத்தை தமது வாழ்வில் கண்டதில்லை என குறிப்பிட்டார்.

போட்டியின் முடிவில் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும், இது அணிக்கு மிகவும் முக்கியமான வெற்றி எனவும் தெரிவித்தார். இறைவன் தங்களை தொடரில் இருந்து வெளியேற விட மாட்டார் என்பது தங்களுக்கு தெரியும் என்றும் மெஸ்ஸி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

No comments:

Post a Comment