அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 06ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிற்பேடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட 2992 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அந்த திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று இடம்பெற்றதுடன், சாட்சியாளர்கள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
இதனையடுத்து வழக்கு எதிர்வரும் 06ம் திகதிக்கு பிற்போடப்பட்டதுடன், சாட்சியாளர்களை அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறும் நீதிபதி ஆர். குருசிங்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment