தென்கொரியாவின் கொய்கா நிறுவனம் ஏழு தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை கல்வி அமைச்சிற்கு நன்கொடையாக வழங்க முன்வந்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை அபிவிருத்திக்காக செலவிடப்படவிருப்பதாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்த நிதியின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. பளை¸ கண்டாவளை¸ கராச்சி¸ பூநகரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலை¸ பிரமந்தநாறு மகா வித்தியாலயம்¸ இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை¸ முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும் மாதிரி பாடசாலைகளாகவும்¸
சென்.தெரேசா பெண்கள் கல்லூரி¸ கணகாம்பிகை குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை¸ சிவாபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை¸ இராமநாதபுரம் (கிழக்கு) அரசினர் தமிழ் கலவன் பாடசாலை¸ பளை இந்து ஆரம்ப பாடசாலை¸ சோரன்பட்டு இலங்கை கிறிஸ்தவ தமிழ் கலவன் பாடசாலை¸ முக்கம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை¸ கiரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை¸ இரணைதீவு ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை ஆகிய ஒன்பது பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்¸ எஸ்.ஸ்ரீதரன் கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் சு.முரளிதரன் உள்ளிட்ட தென்கொரிய நாட்டின் கொய்கா நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment