வீதி விபத்தில் 950 பாதசாரிகள் உயிரிழப்பு - News View

About Us

Add+Banner

Saturday, May 12, 2018

demo-image

வீதி விபத்தில் 950 பாதசாரிகள் உயிரிழப்பு

7b6c17ab2f8b1c16bde2b424fbb4c55f_L
கடந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாயிரத்து 947 வீதி விபத்துக்களில் மூவாயிரத்து 126 பேர் உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. 

இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களேயாகும். இவற்றின் எண்ணிக்கை ஆயிரத்து 18 ஆகும். இந்த விபத்துக்களில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தலைவர் டொக்டர் சிசிற கோத்தாகொட தெரிவித்தார்.

950 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் சமீபத்தில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை தேசிய சபை தலைவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய ஆலோசகர் கலாநிதி பத்தான்ஜி நயார் கருத்துத் தெரிவிக்கையில், வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் 29 சதவீதமானோர் பாதசாரிகளேயாவர். வீதி விபத்துக்களினால் வருடத்தில் 500 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். 

எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், உலகில் இடம்பெறும் வீதி விபத்துக்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வீதி விபத்தை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *