ரணிலின் காதில் முணுமுணுத்த நிமால் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

ரணிலின் காதில் முணுமுணுத்த நிமால்

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை இன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரியப்படுத்தியுள்ளார். இந்த தகவலை அமைச்சர் சந்திம வீரக்கொடி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் ஒன்று கூடிய சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டும் என தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் தீர்மானத்தை அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா பிரதமரின் காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே நேற்று இரவு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில், ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்றைய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மணித்தியாலம் வரையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து, சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலர், பிரதமரை சந்தித்து, தங்களது தீர்மானத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment