வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனையில் நேற்றைய தினம் தாயும் மகளும் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பலொன்றே இந்தக் தாக்குதலை நடத்தியிருப்பதாக சந்தேகம் வெளிடும் பொலிஸார், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அம்பன் குடத்தனையில் வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலமும் வெட்டுக் காயங்களுடன் தாயொருவரும் நேற்று காலை மீட்கப்பட்டனர். இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் தாயாரும் வெட்டுக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக வசித்து வந்த தாயும் மகளுமே இந்த அனர்த்ததிற்கு இலக்காகியுள்ளனர். உயிரிழந்தவர் 58 வயதான நல்லதம்பி தேவகி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது தாயாரான 76 வயதுடைய நல்லதம்பி செல்லம்மா படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment