போலி நோட்டுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

போலி நோட்டுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

போலி 5000 ரூபா நோட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்த மூவரையும் எதிர்வரும் இருவரும் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் எம். சம்ஸ்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 29ம் திகதி திருகோணமலையில் இருந்து காரில் பயணம் செய்துகொண்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தங்கநகர், கிளிவெட்டி பிரதேசத்தில் பெண்கள் நடத்தும் கடைகளில் இரண்டில் ஐந்தாயிரம் ரூபா நோட்டை வழங்கி ஒரு பைக்கற் சிகரெட்டும் 100 ரூபா டயலோக் அட்டையும் பெற்றுக்கொண்டுள்ளனர். பின்னரே அந்த ரூபா நோட்டுக்கள் போலியானவை என்று அடையாளங்காணப்பட்டுள்ளன. 

மீண்டும் திருகோணமலை நோக்கி குறித்த நபர்கள் செல்லும் அடையாளங்கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அபுபக்கர் மொஹொமட் சாஹுல் ஹசன், ஜெயுலாப்தீன் மொஹம்மட் அன்வர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டதையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment