ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம், அவுஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான அனுமதியை கோரியுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு அரச தரப்பால் எதிர்ப்பு தெரிவிக்கப்படாத காரணத்தால் அந்தக் காலத்தில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அவரின் கடவுச்சீட்டை விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வௌிநாட்டில் இருந்த வந்த பின்னர் மே மாதம் 07 ம் திகதிக்கு முன்னர் கடவுச்சீட்டை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி ஆட்சி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வௌியிட்டதாக, திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம்சுமத்தப்பட்டது.
No comments:
Post a Comment