கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலைய ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உள்ளக போராட்டம் காரணமாகவே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கலகத் தடுப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், விமானப்படையினர் மற்றும் கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விமான நிலைய ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி, போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment