இளம் தாய் ஒருவர் குளிக்கும் காட்­சியை படம் எடுத்­தவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

இளம் தாய் ஒருவர் குளிக்கும் காட்­சியை படம் எடுத்­தவர் கைது

இளம் தாய் ஒருவர் குளிக்கும் காட்­சியை தனது கைப்­பே­சியில் வீடியோ எடுத்து கொண்­டி­ருந்­த­தாக கூறப்­படும் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஆரச்­சிக்­கட்டு பொலிஸார் தெரி­வித்­தனர். முந்தல் பத்­துளு ஓயா பிர­தே­சத்தை சேர்ந்த திரு­ம­ண­மான 34 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்தை ஒரு­வரே இவ்­வாறு கைது செய்யப்பட்டுள்ள­வ­ராவார். 

இச் ­சம்­பவம் தொடர்பில் குறித்த இளம் தாய் ஆரச்­சிக்­கட்டு பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை தொடர்ந்தே சந்தேகநபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

தான் தனது வீட்­டுக்கு அரு­கா­மையில் குளித்து கொண்­டி­ருந்த போது தான் குளிக்கும் காட்­சியை ஏணி ஒன்றில் ஏறி நின்று கொண்டு சந்தேகநபர் தனது கைப்­பே­சியில் வீடியோ எடுத்து கொண்டிருந்ததாக அப்பெண் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார். 

எனினும் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து குறித்த கைப்பேசி மீட்­கப்­பட­வில்லை என பொலிஸார் தெரி­வித்­தனர். சம்பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment