இளம் தாய் ஒருவர் குளிக்கும் காட்சியை தனது கைப்பேசியில் வீடியோ எடுத்து கொண்டிருந்ததாக கூறப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆரச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பத்துளு ஓயா பிரதேசத்தை சேர்ந்த திருமணமான 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த இளம் தாய் ஆரச்சிக்கட்டு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் தனது வீட்டுக்கு அருகாமையில் குளித்து கொண்டிருந்த போது தான் குளிக்கும் காட்சியை ஏணி ஒன்றில் ஏறி நின்று கொண்டு சந்தேகநபர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்து கொண்டிருந்ததாக அப்பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து குறித்த கைப்பேசி மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment