மார்­புக்­கச்­சைக்குள் நீதி­மன்­றுக்கு ஹெரோயின் கொண்­டு­வந்த பெண் : கொழும்பில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

மார்­புக்­கச்­சைக்குள் நீதி­மன்­றுக்கு ஹெரோயின் கொண்­டு­வந்த பெண் : கொழும்பில் சம்பவம்

விசாரணைகளுக்காக கொழும்பு பிரதான நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட கைதி ஒருவரின் அருகில் வந்த பெண் ஒருவர், தனது மார்பு கச்சையை கழற்றியுள்ளார். இதனை அவதானித்து பொலிஸார் உடனடியாக குறித்த பெண்ணை பிடித்து பரிசோதித்த போது, மார்பு கச்சையினுள் ஹெரோயின் இருப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு,

மார்­புக்­கச்­சைக்குள் மறைத்து, ஹெரோயின் போதைப்பொரு­ளை நீதி­மன்­றுக்கு எடுத்து வந்து, வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக அழைத்து வரப்­பட்ட விளக்­க­ம­றியல் கைதி ஒரு­வ­ருக்கு அதனை வழங்க முற்­பட்ட பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் நேற்று கைது செய்­தனர்.

கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் சந்­தேக நபர்களைத் தடுத்து வைக்குமிடத்தில் வைத்து குறித்த பெண்ணை கைது செய்­த­தா­கவும் அவ­ரிடமிருந்து கைதிக்கு வழங்க முற்­பட்ட 5 கிராம் 200 மில்லி கிராம் நிறை­யு­டைய ஹெரோயின் போதைப் பொரு­ளை மீட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

நீதி­மன்ற வளா­கத்­துக்குள் வருவோர் சோதனை செய்­யப்­பட்ட பின்பே உள் நுழைய அனு­ம­திக்­கப்­படும் நிலையில், இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர பகு­தியைச் சேர்ந்த குறித்த பெண் நேற்றுக்காலை நீதி­மன்­றுக்கு வந்­துள்ளார்.

பெண்­ணொ­ருவர் போதைப்பொருள் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை­யத்தின் விசேட நட­வ­டிக்கைப் பிரி­வுக்கு இர­க­சிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸார் அவ­தா­ன­மாக இருந்­துள்­ளனர்.

குறித்த பெண் தனது மார்புக் கச்­சைக் குள் மறைத்து வைத்த போதைப் பொரு­ ளை கைதிக்கு வழங்க முற்­பட்டவேளை யில் பொலிஸ் கான்ஸ்­டபிள் அவரைக் கைது செய்­துள்ளார். கைதான பெண்­ணி டம் வாழைத்­தோட்டப் பொலிஸார் விசார ணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment