ஈபிடிபியின் பிடியில் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை கூட்டமைப்பு வசம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 6, 2018

ஈபிடிபியின் பிடியில் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை கூட்டமைப்பு வசம்

நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு இன்று வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிசாளராக பிலிப் பற்றிக் ரொஷானை பிரேரித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரை பிரேரித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரேரித்த பிலிப்பற்றிக் ரொஷான் 7 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரேரித்த நல்லதம்பி சசிக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

13 உறுப்பினர்களை கொண்ட நெடுந்தீவு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 4 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் 06 ஆசனங்களையும் சுயேட்சை குழு 02 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழுவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment