விவசாயிகளுக்கான மானிய விலையில் உரம் வழங்கும் திட்டம் இன்று நள்ளிரவு (07) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 50 கிலோ கிராம் கொண்ட உர மூட்டை ஒன்று, நெற் செய்கையாளர்களுக்கு ரூபா 500 வீதமும், ஏனைய பயிர்ச்செய்கையாளர்களுக்கு ரூபா 1,500 வீதமும், மானியமாக உரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட குறித்த யோசனை, அரசாங்க உர மானிய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக, கமத்தொழில் அமைச்சில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமைய, இது வரை உர கொள்வனவிற்காக, பணம் வழங்கப்பட்ட முறைக்கு பதிலாக மீண்டும், உரம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment