அட்டப்பள்ளம் விவகாரம் கைதானவர்களை உடன் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

அட்டப்பள்ளம் விவகாரம் கைதானவர்களை உடன் விடு­தலை செய்­யப்­பட வேண்டும்.

அட்­டப்­பள்ளம் இந்து மயான ஆக்­கி­ர­மிப்பால் அம்­பாறை மாவட்ட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் கொந்­த­ளித்­துள்­ளனர். இச்­செ­யற்­பாடு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் தெரி­வித்தார்.

அம்­பாறை நிந்­தவூர் பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட அட்­டப்­பள்ளம் தமிழ் மக்­களின் மயான பூமி அப­க­ரிப்பு முறுகல் நிலையைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள 23 தமிழ் இளை­ஞர்­களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில். அட்­டப்­பள்ளம் கிராமம் முற்­றிலும் தமி­ழர்கள் வாழ்ந்த பழம்­பெரும் பிர­தேசம். இவ்­வாறு பரம்­ப­ரை­யாக இந்தப் பிர­தே­சத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் கடந்த காலத்தில் இடம்­பெற்ற வன்­செயல் நட­வ­டிக்­கையின் கார­ண­மாக கிரா­மத்தை விட்டு வெளி­யேற்­றப்­பட்­டனர். 

ஆயினும் பல குடும்­பங்கள் கிரா­மத்தை விட்டு வெளி­யே­றாது இன்று வரை வாழ்ந்து வரு­கின்­றனர் அதேபோல் கிரா­மத்தின் கடற்கரையை அண்­டி­ய­தான பிர­தே­சத்தில் அமைந்­துள்ள காணியை சோழர் காலம் தொடக்கம் மயா­ன­மா­க பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் மயா­னத்தைக் கூட விட்டு வைக்­க­மு­டி­யாது மனிதாபிமான மற்ற ரீதியில் மயா­னத்­தையும் தனது பூமி எனக் கூறி அதனைப் பெறு­வ­தற்கு கடந்த பல வரு­ட­களாக ஒருவர் முயற்சிக்கின்றார். பிரே­தங்கள் புதைக்­கப்­பட்ட புதை குழி­க­ளுக்கு மேலாக வேலியைப் போட்டு மனச்­சாட்சி அற்ற செயற்­பாட்­டையும் மேற்­கொண்­டுள்ளார்.

மக்­களின் பல எதிர்ப்­புக்கு மத்­தியில் அவ­ரது முயற்சி நிறை­வு­றாத நிலையில் சம­ர­சப்­பேச்சு வார்த்தை என மக்­களை அழைத்த நிந்தவூர் உத­விப்­பி­ர­தேச செய­லாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர், உள்­ளிட்­ட­வர்கள் அட்­டப்­பள்­ளத்­துக்கு சென்று ஆலய தலைவர் உள்­ளிட்ட மக்­களை அழைத்து பேசி­யுள்­ளனர்.

நீதி­மன்­றத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் எவரும் சம்­பந்­தப்­பட்ட இடத்திற்கு வரு­கை­த­ராத நிலையில் காணி தொடர்­பி­லான பிணக்கைத் தீர்க்க அதி­கா­ர­மில்­லாத உத­விப்­பி­ர­தேச செய­லாளர் அழைத்த போது தமது மயா­னத்தை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது எனக் கூறிய மக்கள் எதிர்ப்­பினை வெளி­யிட்ட நிலை­யி­லேயே வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. 

இந் நிலையில் குறித்த 23 அப்­பாவித் தமிழ் மக்­களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் உடன் விடு­தலை செய்யப்­பட வேண்டும். 

ஆகவே ஜனா­தி­பதி, பிர­தமர் நல்­லி­ணக்க அமைச்சு உள்­ளிட்­ட­வர்கள் இவ்­வி­டயம் தொடர்பில் தலை­யீடு செய்து கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்வதுடன், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். 

இல்லையேல் அம்பாறை மாவட்டம் மட்டுமல்லாது இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment