நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன் ஜனாதிபதி, பிரதமரை சந்திப்போம் – மாவை சேனாதிராஜா - News View

About Us

Add+Banner

Breaking

  

Saturday, March 31, 2018

demo-image

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன் ஜனாதிபதி, பிரதமரை சந்திப்போம் – மாவை சேனாதிராஜா

12-1-1
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு சம்பந்தமாக தமது பாராளுமன்ற குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

இன்று (31) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவிதத்தில் செயற்பட வேண்டும் என்ற கேள்வி எழுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இது தொடர்பில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதன்படி எதிர்வரும் 02 அல்லது 03ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அதற்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சில விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டி இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

இதேவேளை, சில ஊடகங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயறப்படுவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். ஈ.பி.டி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துவிட்டதாக கதைகட்டும் அளவிற்கு சில தரப்பினர் சென்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *