புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, PCR பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் சில வைத்தியசாலகளில் இப்பரிசோதனைகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாவது, ”கொவிட் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. PCR பரிசோதனை வசதிகளுள்ள வைத்தியசாலைகள், தற்போது இந்தச் சோதனைகளைத் துரிதப்படுத்தியுள்ளன.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியசாலைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பிலான கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகள் சிலவற்றில் தற்போது பரவிவரும் புதிய கொவிட் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும். ஆனால், உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது”
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, காலி வைத்தியசாலைகளும், ஏனைய சில போதனா வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொவிட் தொற்று பரவல் தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானத்துடன் செயற்பட்டு வருகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சில நாடுகளில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு உள்ளிட்ட கொவிட் குழு மீண்டும் கூடி, எமது சுகாதார கட்டமைப்பிற்குள் தற்போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதனன்று இது குறித்த பிரதான கலந்துரையாடல் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும் மக்கள் அச்சப்படுமளவிலான சூழல் இல்லை. அதற்காக இலங்கையில் இப்பரவல் ஏற்படாது என்று நாம் கூறவில்லை. இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். உலகலாவிய தொற்று நிலை குறைவடைந்த போதிலும், அதன் பின்னரும் கொவிட் தொற்று ஆங்காங்கு காணப்பட்டது.
கொவிட் தொற்றானது ஏனைய வழமையான தொற்றுக்களைப் போல் மாறியுள்ளது. கடந்த ஆண்டுகளிலும் மே, ஜூன் காலப்பகுதியிலேயே கொவிட் தொற்று சற்று அதிகரித்த போக்கினை காண்பித்தது. இவ்வாண்டு ஆசியாவிலேயே கொவிட் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. சிங்கப்பூரில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, காலி வைத்தியசாலைகளும், ஏனைய சில போதனா வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை தற்போது தடிமன் காய்ச்சலும் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறான நோயாளர்களும் மிகவும் அவதானமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
அதற்கமைய கொவிட் நிலைமை எவ்வாறு காணப்படுகிறது என்பது மதிப்பிடப்படும். புதிய பிரழ்வுகள் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமையில் இல்லை. குறைந்தளவான மரணங்களைக் கொண்ட கொவிட் நிலைமையே காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment