கல்விக்காய் கடைசி மூச்சியுள்ளவரை பாடுபடுவோம் - மடவளையில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

கல்விக்காய் கடைசி மூச்சியுள்ளவரை பாடுபடுவோம் - மடவளையில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்

மடவளை மதீனா தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று (03) சனிக்கிழமை மடவளை விளையாட்டு மைதானத்தில் மிகச்சிறப்பாக நடந்தேறின. இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக மடவளை மதீனா தேசிய கல்லூரியின் பழைய மாணவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் இஷாக் ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கல்வியில் கவனம் செலுத்தி மடவளை மதீனா மாணவர்கள் அப்பாடசாலையின் பெயரை இலங்கை முழுவதிற்கும் எவ்வாறு அறிமுகம் செய்து வைத்தார்களோ, அதேபோல் விளையாட்டுத் துறையிலும் தங்கள் பாடசாலையின் பெருமையை இலங்கை முழுவதற்கும் தெரியப்படுத்துமாறு மாணவர்களிடம் அன்பாய் வேண்டிக்கொண்ட இவர் கல்வித்துறைக்காக தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் இப்பாடசாலைக்கு வழங்குவதாக கூறினார். 
அத்தோடு கல்விக்காய் கடைசி மூச்சியுள்ளவரை நாம் பாடுபடவேண்டும் என்றும் அதற்காக பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் ஒன்று சேரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் கண்டி மாவட்டத்தில் தமிழ் மொழிமூல பாடாசாலைகளின் அத்தியாவசியத்தையும் அதன் மூலம் தமது எதிர்கால சந்ததிகள் பெறவிருக்கும் நன்மைகள் பற்றியும் உரையாற்றியிருந்தார்.

ஐ.எம்.மிதுன் கான்
ஊடக இணைப்பாளர் - பா.உ.இஷாக் ரஹ்மான்.

No comments:

Post a Comment