திய­த்த­லாவ பஸ் குண்டுவெடிப்பு தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­காக எடுத்துச் சென்றபோதே வெடித்தது. - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

திய­த்த­லாவ பஸ் குண்டுவெடிப்பு தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­காக எடுத்துச் சென்றபோதே வெடித்தது.

தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­காக எடுத்துச் சென்றபோதே குண்டு தவறி வெடித்­த­தாக தியத்­த­லாவ - கஹ­கொல்ல பகு­தியில் பஸ் வண்­டி­யினுள் வெடித்த கைக்­குண்டை எடுத்துச் சென்­ற­தாக கூறப்­படும் கஹ­கொல்ல இரா­ணுவ முகாமில் சேவை­யாற்றும் சார்ஜண்ட் மேஜர் தர இரா­ணுவ வீரர் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூலமளித்­துள்ளார். 

தியத்­த­லாவ வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் பாது­காப்பில் குறித்த சார்ஜண்ட் சிகிச்சை பெற்றுவரும் நிலை­யி­லேயே நேற்று முன்தினம் மாலை அவ­ரிடம் விஷேட பொலிஸ் குழு, வைத்­தி­ய­சா­லையில் வைத்து முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அவர் இதனை வெளிப்படுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரி­வித்தார்.

தான் பல­ரிடம் 10 இலட்சம் ரூபா­வுக்கும் மேல் கடன் வாங்கியுள்ளதாகவும், அந்த கடன் தொகையை அவர்கள் திரும்ப கேட்கும்போது தன்னால் அதனை திருப்பிக் கொடுக்க முடி­யாத சூழல் நில­விய நிலை­யி­லேயே தற்­கொலை தொடர்பில் தீர்மானமெடுத்து குண்டை முகா­முக்கு எடுத்துச் சென்ற­தா­கவும், முகாமில் வைத்து தற்­கொலை செய்­து­கொள்­வதே திட்­ட­மாக இருந்தபோதும் குண்டு இடையில் தவ­று­த­லாக பஸ் வண்­டி­யி­லேயே வெடித்­து­விட்­ட­தா­கவும் அவரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்­ள­தாக அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தான் வட பகு­தியில் சேவையாற்றும்போது குறித்த கைக்­குண்டு தனக்கு கிடைக்கப் பெற்­ற­தா­கவும், அது நல்ல நிலையில் இருக்­க­வில்லை எனவும் அவர் வாக்கு மூலத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். குறித்த சார்ஜண்ட் மேஜர், இயந்­திர பொறி­யியல் படை­ய­ணியின் கஹ­கொல்ல முகாமின் ஆயுத களஞ்­சி­யத்­துக்கு பொறுப்­பாக செயற்­பட்­டவர் எனவும் அவர் விடு­மு­றைக்­காக வீடு சென்று குறித்­த தினம் கஹ­கொல்ல முகாமுக்கு திரும்­பிக்­கொண்­டி­ருக்கும்போதே குண்டை உடன் எடுத்து வந்­துள்­ள­மையும் இது­வ­ரை­யி­லான பொலிஸ் விசாரணைகளில் உறு­தி­யாகி­யுள்­ளது. 

அதன்­படி பஸ்ஸில் வெடித்த குண்டு திய­த­லாவ - கஹ­கொல்ல முகாமுக்குள் எடுத்துச் செல்லும் நோக்கத்­து­ட­னேயே குறித்த சார்ஜண்ட் மேஜ­ரினால் உடன் கொண்டு செல்­லப்பட்­டுள்­ளமை உறுதி­யாகி­யுள்­ளது. மாத்­த­ளையைச் சேர்ந்த குறித்த சார்ஜண்ட் மேஜர் தர வீரர், விடு­மு­றைக்கு சென்­று­விட்டு மீள முகா­முக்கு யாழில் இருந்து திய­த்த­லாவ நோக்கி பய­ணிக்கும் பஸ்ஸில் வந்துள்ள­துடன், கண்­டியில் வைத்து அன்­றைய தினம் அதி­காலை 1.05 மணிக்கு அவர் பஸ்ஸில் ஏறி­யுள்ளார். 

பஸ் மாற்­றப்­பட்டு திய­த்த­லாவை நோக்கி சென்ற மற்­றைய பஸ்ஸுக்கு பண்­டா­ர­வ­ளையில் வைத்து ஏற்­றப்­பட்­டுள்ளார். இந்த நிலையில் அந்த பஸ் வண்­டியில் சாரதி இருக்கை பக்­க­மாக 3 ஆவது நிரலில் 3 ஆசனம் கொண்ட தொகு­தியில் அவர் நடுவில் அமர்ந்துள்ளார். அவ­ரது வலது புறத்தில் கஹ­கொல்ல முகாமில் சேவை­யாற்றும் இலி­கிதர் ஒரு­வரும் இடது புறத்தில் இரா­ணுவ பொலிஸ் பிரிவின் உத்­தி­யோ­கத்தர் ஒருவரும் இருந்­துள்­ளனர். 

யாழ். - பண்­டா­ர­வளை பஸ்ஸில் கண்­கா­ணிப்பு கமரா இருந்த நிலையில் அதன் காணொ­ளி­களை சோதித்­துள்ள பொலிஸார் குறித்த சார்ஜண்ட் மேஜர் ஒரு­வ­கை­யான பதற்­றத்­து­ட­னேயே பஸ்ஸில் பய­ணித்­ததை அவதானித்­துள்­ளனர். அத்­துடன் எரிந்த பஸ்ஸிலும் கண்­கா­ணிப்பு கமரா இருந்­துள்ள நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பில் உறுதி செய்ய அந்த காணொ­ளி­களை மீளப்பெறும் பொருட்டு நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் அது தொடர்பிலான கரு­விகள் மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ளன. 

இந்நிலையில் கஹகொல்ல முகாம் அருகே இறங்கும் நோக்கத்துடன் இலிகிதருடன் குறித்த சார்ஜண்ட் மேஜர் தயாராகியுள்ளார். இதன்போது அவரது தொலைபேசி கீழே விழுந்துள்ளதுடன் அதனை எடுக்க முற்பட்டபோது மடியில் இருந்த பையில் இருந்தே குண்டு வெடித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment