மட்டக்களப்பில் 200 பட்டதாரிகளுக்கும், 40 டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் ஆசிரிய நியமனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

மட்டக்களப்பில் 200 பட்டதாரிகளுக்கும், 40 டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் ஆசிரிய நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (03) பிற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

200 பட்டதாரிகளுக்கும், 40 டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 21 பேருக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 3 பாடசாலைகளுக்கான உபகரணங்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, சிறியாணி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, தலைமைச் செயலாளர் சரத் அபேகுணவர்தன, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment