தேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்.! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

தேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்.!

நாடு தழு­விய ரீதியில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களை அன்­றைய தினம் இரவு ஒன்­பது மணிக்கு வெளி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் இரத்­தி­ன­ஜீவன் எச். ஹூல் தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தொடர்பில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் இரத்­தி­ன­ஜீவன் எச்.ஹூலிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரி­வித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான பணிகள் இறுதிக் கட்­டத்தை அண்­மித்­துள்­ளன. எஞ்­சி­யுள்ள பணி­க­ளையும் இன்னும் சில தினங்களில் நிறை­வு­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். வாக்காளர்க­ளுக்­கான வாக்­காளர் அட்­டை­களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் சில­ருக்கு தாம் வசிக்கும் தொகுதிகளுக்­கு­ரிய வாக்­காளர் அட்­டை­யல்­லாது ஏனைய தொகுதிக­ளுக்­கு­ரிய வாக்­காளர் அட்டைகள் அனுப்­பப்­பட்­டுள்­ளன. 

கிரா­ம­ சேவகர் மட்­டத்தில் தொகு­தி­க­ளுக்­கு­ரிய வாக்­காளர் பிரிப்பில் ஏற்­பட்ட தவ­றி­னா­லேயே குறித்த நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே அவ்வாறு தாம் வசிக்கும் தொகு­தி­க­ளுக்­கு­ரிய வாக்­காளர் அட்டையல்­லாது வேறு தொகு­தி­களின் அட்­டைகள் கிடைத்திருப்பின் அதனை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் தொடர்புகொண்டு மாற்­றிக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்­கை எடுக்க வேண்டும்.

எனவே எதிர்­வரும் சனிக்­கி­ழமை காலை ஏழு மணிக்கு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு ஆரம்­ப­மா­வ­துடன் அன்று மாலை நான்கு மணிக்கு நிறை­வ­டையவுள்­ளது. இதே­வேளை நான்கு முப்­பது மணிக்கு வாக்­கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்­முறை தொகுதி மட்­டத்தில் வாக்கெண்ணும் பணி நடை­பெ­ற­வுள்­ள­தனால் இரவு 8.30 மணிக்குள் வாக்கெண்ணும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே அன்றிரவு ஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment