நல்லாட்சியின் மோசடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

நல்லாட்சியின் மோசடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ

எனது அமைச்­ச­ர­வையில் மோசடி இடம்­பெற்­றது என்றால் நானும் அதில் சம்­பந்­தப்­பட்­டுள்ளேன் என்று தான் அர்த்தம். அதே போன்று தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் உள்ள அமைச்­சர்கள் பெரும்­பா­லானோர் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். அப்படியென்றால் ஜனா­தி­ப­தியும் இணைந்து தான் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

பொலன்­ன­று­வையில் நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கை யில், ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன ஒரு நாட்டின் தலைவர் போன்­றல்­லாமல் பொறுப்­பற்ற விதத்தில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றார். ஊழல் மோச­டி­களில் ஈடுபட்­ட­வர்­களை நர­கத்­திற்கு அழைத்து செல்­லாமல் ஓயப்­போ­வ­தில்லை என அதி­க­மாக உணர்ச்­சி­ வ­சப்­பட்­டுக்­ கொண்டி­ருக்­கின்றார். அவர் சற்று பொறு­மை­யாக இருக்க வேண்டும். இல்­லை­யெனில் அவ­ரது உடல் நலமே பாதிக்­கப்­படும். 

இப்­போது கூட அவரின் செயற்­பா­டுகள் அவ்­வாறு தான் உள்­ளன. மேடைப் பேச்­சுக்­களின் போது என்ன பேசு­கின்றோம் என்று தெரியா­ம­லேயே பேசிக் கொண்­டி­ருக்­கின்றார். அர­சாங்­கத்தால் கடன் பெறப்­பட்­டுள்­ளது. ஆனால் அது பற்­றிய எந்த தக­வலும் இல்லை, அந்த கடன் தொகைக்­கான வேலைத்­திட்­டங்­களும் நடைபெ­ற­வில்லை எனக் கூறு­கின்றார். அப்­ப­டி­யென்றால் அந்த பணத்­திற்கு என்ன நடந்­தது என ஜனா­தி­பதி தான் கூற வேண்டும். 

என்­னு­டைய அர­சாங்கம் தான் பாரிய கடன்பெற்­றது என இவர்கள் குறை கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். நான் பெற்ற கடனில் ஆட்சியை இவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் போது 70 வீத அபிவிருத்தியை செய்­தி­ருந் தேன். ஆனால் இந்த அர­சாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் பூர்த்­தி­யா­கியும் நான் பெற்­றதை விடவும் அதிக கடனை மாத்­தி­ரமே பெற்­றுள்­ளார்­களே தவிர நூற்றுக்கு 30 வீத அபி­வி­ருத்தி கூட மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

என்னால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­க­ளையும் நிறுத்திவிட்­டார்கள். ஒரு முறை மக்கள் ஏமாந்து விட்டார்கள். மீண் டும் மீண்டும் அவர்களை ஏமாற்ற முடி யாது. மீண்டும் ஏமாற மக்கள் தயாராகவும் இல்லை. எனவே இம்முறை தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்க ளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment